நத்தம் நிலம் ஆக்கிரமிப்பு- கிராமமக்கள் தாசில்தாரிடம் மனு

63பார்த்தது
தஞ்சை மாவட்டம், பாபநாசம்  தாலுக்கா, மெலட்டூர்  3 ஆம் சேத்தி வேப்பங்குளம் பகுதியில் காட்டு குறிச்சி கிராமமக்கள் பயன்பாட்டில் இருந்த புல எண் ‌173/3ஏ  0. 26. 5 ஏர்ஸ் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில்  தனிநபர் ஆக்கிரமிப்பு  செய்து கொட்டகை அமைத்துள்ளனர்.   30 வருடத்திற்கு மேலாக  வேப்பங்குளம் காட்டுகுறிச்சி கிராமமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபரிடமிருந்து மீட்டு தரக்கோரி  கிராமமக்கள் பாபநாசம் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர். தாசில்தார் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி