அமமுக நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

64பார்த்தது
பாபநாசம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளராக பி. பிரேம்நாத், பாபநாசம் பேரூர் செயலாளராக கே. குமார் ஆகியோரை நியமனம் செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன், துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான எம். ரெங்கசாமி  ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அய்யம்பேட்டையில் எம். ஜி. ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அய்யம்பேட்டை அண்ணா சிலையிலிருந்து மாவட்ட செயலாளர் எம். ரெங்கசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து எம். ஜி. ஆர் திருஉருவ சிலைக்கு அ. ம. மு. க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் டி. ஏ. ஜெயராமன், மாநில எம். ஜி. ஆர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம், அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் என்கிற கோவிந்தசாமி , மாநில விவசாய பிரிவு இணை செயலாளர் மகேந்திரன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் குலோத்துங்கன், பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவண பாபு, மாவட்ட துணை செயலாளர் வடிவேல் வாண்டையார், அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் சிட்டி பாபு, பொதுக்குழு உறுப்பினர் திவாகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி