பாபநாசம் - Papanasam

ரோட்டரிசங்கம் சார்பில் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்

பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் சூர்யா ராகவி மெடிக்கல் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி உதவி ஆளுநர் கே. எஸ். அறிவழகன், ரோட்டேரியன் சிவ. சரவணன், மருத்துவ முகாம் சேர்மன் அரவாணன், மெடிக்கல் உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஏ. எஸ். தீபலஷ்மண் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் 80 க்கும்  மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் பொறியாளர் செந்தில்நாதன், பகுருதீன் அலி, விவேகானந்தம், முருகானந்தம், சுப்பிரமணியன், சீனிவாசன், அசோகன், வழக்கறிஞர்  முருகவேலு, பொருளாளர் வி. கே. ராமநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా