மனைவியின் தகாத உறவால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாலமேட்டில் மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். மனைவி ஆண் நண்பருடன் சென்ற நிலையில், விரக்தியமடைந்த கணவர், காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தந்தையை இழந்து 3 குழந்தைகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளதால், உறவினர்கள், அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.