முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: கலெக்டர் பரிசு

71பார்த்தது
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் கடந்த 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதாவது, கபடி, கைப்பந்து, கால்பந்து, குண்டு எறிதல், வட்டு எறிதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், செஸ், நீச்சல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கவும், அடுத்து மண்டல மற்றும் மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கு செல்லவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்ட அளவில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காந்தி மைதானத்தில் நேற்று மாலை பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் தொகுதி எம். எல். ஏ. சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி