சேலம் ஜாகீர் சின்ன அம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜங்சன் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் அவர் தண்டவாள பாதையை கடந்து வீட்டுக்கு செல்வதற்காக அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறினார். அப்போது ரெயிலுக்கு மேலே சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் கருகிய மோகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.