வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

50பார்த்தது
சேலம் குகை திருப்பாவை குழு சார்பில் 60-வது ஆண்டாக வெள்ளி கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோட்டை பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நேற்று இரவு குகை பகுதியில் உள்ள சிவபாண்டு ரங்க பஜனை கோவில் மடாலயத்தில் நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு திருவாராதனம் கண்டருளி பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து ராஜ அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இந்த வீதி உலா திருச்சி மெயின் ரோடு, நரசிங்கபுரம் தெரு, லைன் ரோடு, அம்பலவாண சாமி கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் சிவபாண்டு ரங்க பஜனை கோவில் மடாலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குகை திருப்பாவை குழுவினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி