சந்தேகத்துக்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு பறிமுதல்
திருவாடானை அருகே தொண்டி பகுதி கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த அதிக திறன் கொண்ட விசைப்படகை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரிடம் விசாரித்து வருகின்றனா். தொண்டி அருகே பாசிப்பட்டினம் மீனவ கிராமத்தில் சந்தேகத்துக்கிடமாக ஒரு இலங்கைப் படகு நிறுத்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தொண்டி கடலோர காவல்படை போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிக திறன் கொண்ட அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வந்த விசைப்படகை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரான இதே ஊரைச் சோ்ந்த சா்புதின் மகன் அபூபக்கரிடம் விசாரணை நடத்தினா். முதல் கட்ட விசாரணையில் கடந்த ஒரு வாரமாக அனுமதி இல்லாத அதிக திற்ன கொண்ட இந்த இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகை வாங்கி கடல் தொழிலுக்கு செல்வதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, அந்த விசைப் படகை பறிமுதல் செய்து, அவரிடம் தொண்டி கடலோர காவல்படை உதவி ஆய்வாளா் கதிரவன் விசாரணை நடத்தி வருகிறாா்.