திருவடனை - Tiruvadanai

கமுதியில் சாக்கு வேடம் அணிந்து வினோதமான நேர்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி மாத பொங்கல் விழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. இந்த கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளி அம்மனுக்கு வருடா வருடம் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. நிறைவு நாளான நேற்று (செப்.,12) காலையில் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் ஆகிய நேர்த்திக்கடன் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய நேர்த்திக்கடனான சாக்கு வேஷம் அணிந்து நேத்திக்கடன் செலுத்தினர் சாக்குபைகளை பேண்ட், சட்டை மாதிரி தைத்து அதை அணிந்து பின்பு வைக்கோல்களை சாக்குகளில் திணித்து, முகத்தையும் சாக்கு வைத்து, மூடி வைத்த வைக்கோல் மனிதர்கள் 7 பேர் சாக்கு வேஷம் அணிந்து நேத்திக்கடன் செலுத்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முளைப்பாரி கிளம்பிய போது மேள தாளங்களுடன் சாக்கு வேடம் அணிந்தவர்களும் முளைப்பாரிக்கு முன்பே சென்றன. மேளதாளம், வான வேடிக்கையுடன் இந்த ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளோடு அழகு வள்ளி அம்மன் கோவிலுக்கு சென்று கிராமத்தில் உள்ள ஊரணியில் முளைபாரிகளை கரைத்தனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்