கோயில் உண்டியல் திருட்டு: மூன்று பேர் கைது.!

78பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 'போரூர்' கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து நேற்று மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றிருந்தனர்

இது தொடர்பாக திருப்பாலைக்குடியைச் சேர்ந்த மாதேஷ், விமல்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் திருவாடானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களிடம் இருந்து ரூபாய் 500ஐ போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய குற்றத்திற்காக அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி