ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!

83பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள என். மங்களம் பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்களின் குடியிருப்பு பகுதிக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் வழங்காமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு கூறிய அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் 'தமிழ்ச்செல்வி கண்ணன்' திட்டமிட்டே இக்காரியத்தை செய்வதாக கூறி, அப்பகுதி மக்களை புறக்கணித்து வருவதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் குளிக்க இயலாத நிலை ஏற்படுவதாக கூறி, பள்ளி குழந்தைகளுடனும், தங்கள் வீட்டில் உள்ள சிறு கை குழந்தைகளையும் அழைத்து வந்த தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், திருவாடானை வட்டாட்சியர் மற்றும் திருவாடானை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அந்தப்பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவளித்ததின் பேரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி