45 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா: திருவிளக்கு பூஜை.!

84பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையநாதபுரம் கிராமத்தில் 45 ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் திரு விளக்கு பூஜை விழாவில் பெண்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

முன்னதாக நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தன இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் 16 வகையான மூலிகை திரவிய அபிசேகம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.

இந்த திருவிழாக்கு பூஜையில் பெண்கள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி