உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம்..!

83பார்த்தது
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உப்பூரில் உள்ள ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 8 -வது நாளான இன்று விநாயகருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தில் விநாயகர் மற்றும் சித்தி-புத்தி தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் மணமேடையில் எழுந்தருளினர்.


ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் மற்றும் மண்டகப்படியார்கள் ஆகியோர் முன்னிலையில் சரியாக விநாயகர் சித்தி, புத்தி தெய்வங்கள் இருவரின் கழுத்திலும் புரோகிதர்கள் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கும் சித்தி, புத்திக்கும் சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து விநாயகருக்கு பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர். மேலும் திருக்கல்யாணம் விருந்தாக பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது இக்கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி