துரோபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா: பக்தர்கள் பரவசம்.!

74பார்த்தது
ஆர் எஸ் மங்கலத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலத்தில் அமைந்துள்ள, திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா கடந்த ஆகஸ்ட் 9 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிங்கியது.

அன்று முதல் தினமும் பல்வேறு கிராமத்தினர் சார்பாக, மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரௌபதி திருக்கல்யாணம், கோட்டை சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கட்டுப்பழி, படுகளம், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
  
விழாவின் தொடர்ச்சியாக பூக்குழி விழா இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் அரசு ஊரணி குளத்து  நீரில் நீராடி அங்கிருந்து ஊர்வலமாக வலம் வந்து திரௌபதி அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மூலவர் மற்றும் அம்மனுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்,


விழாவின் தொடர்ச்சியாக மஞ்சள் நீராடுதல் விழா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி