ஏழைப் பெண்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

79பார்த்தது
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் நிறைந்த ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற (ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம்) 38, 700 பெண்களுக்கு (ரூ. 645 இலட்சம்) ஆறு கோடியே நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக் குஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து (ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம்) 1, 200 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும், பயனாளி ஏழைப் பெண்ணாக இருத்தல் வேண்டும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுமட்டுமன்றி, பயனாளி 30% தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும், பயனாளி அந்த (சம்பந்தப்பட்ட) கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி