தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய குறைந்தபட்ச தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வருங்கால வைப்பு நிதி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 1, 000 இலிருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் கணக்கிடும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்றிட வழிவகை செய்ய வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా