தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூரில் இன்று கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூரில் இன்று கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூரில் இன்று (செப். 13) கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் சி. தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024, ஜூன் 27-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில், கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், 2 மாதங்களுக்கு ஒருமுறை என மண்டல அளவில் பணியாளர் நாள் நடத்தப்படும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செப். 13-ம் தேதி காலை 10.30 மணிக்கு, தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்கள், தங்களது பணி தொடர்பான குறைகள் இருப்பின் மனுவாக அளித்து தீர்வு காணலாம். மேலும், பணியின்போதும், வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా