சூலூர் - Sulur

தாயை கடைக்கு அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை

தாயை கடைக்கு அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை

கோவை ஆர். எஸ். புரம் ஆரோக்கிய சாமி ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 27). பெயிண்டர். இவர் நேற்று (செப்டம்பர் 15) வீட்டில் இருந்த தனது தாயாரிடம் தனக்கு வயிறு வலிக்கிறது, கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வரும் படி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது தாய் பழனியம்மாள் (வயது 50), கடைக்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் திரும்பினார். அப்போது சீனிவாசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా