சூலூர் - Sulur

மது பழக்கத்தை விட முடியாததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை!

மது பழக்கத்தை விட முடியாததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை!

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி பிரிவை சேர்ந்தவர் உத்தரராஜ் (39). எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார். இதற்கிடையே உத்தரராஜ் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மடத்துக்குளத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். அங்கு ஒரு நாள் குடிபோதையில் பணிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அடிக்கடி மது குடித்து வந்ததால் அவருடைய மனைவியும் மது குடிக்கும் பழக்கத்தை விடும்படி அறிவுரை கூறி வந்தார். ஆனாலும் அவர் கேட்காமல் மது குடித்து வந்தார். மது குடிப்பதை நிறுத்த முடியவில்லை என உத்தரராஜ் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் நேற்று (செப்.,12) காலையில் வீட்டில் யாரும் இல்லாத போது உத்தரராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுல்தான் பெரிய போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా