கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணத்தில் டாஸ்மாக் பிஎம்எஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் டாஸ்மாக் பிஎம்எஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருங்கால வைப்புநிதி பெறும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி டாஸ்மாக் பிஎம்எஸ் சங்கத்தினர் வியாழக்கிழமை கும்பகோணம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பிஎம்எஸ் சங்க மாவட்ட தலைவர் எஸ். பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எஸ். பாலகுமாரன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் டி. நாகராஜன் வருங்கால வைப்புநிதியில் ஓய்வு ஊதிய தொகை ரூ. 1,000லிருந்து 5 ஆயிரமாக உயர்த்தவும், மருத்துவ சிகிச்சை, பஞ்சபடியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலர் சி. கோபு, மாநில செயலர் ரமேஷ், மாவட்ட தலைவர் எஸ். சுரேஷ் உள்ளிட்ட 30 க்கும் மோலானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். முடிவில் வருங்கால வைப்புநிதி நிறுவன அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా