கும்பகோணம் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

59பார்த்தது
கும்பகோணம் மாநகராட்சி உட்பட்ட வார்டு எண் 7 மற்றும் 8ல் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் தங்களுக்கு ஏற்படும் ஈமகாரியங்கள் செய்வதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அருகில் உள்ள தலைமை அரசு மருத்துவமனை பின்புறம் காவிரி ஆற்றின் கரையில் (பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில்) படித்துறை மற்றும் ஈமக்கிரியை நடத்திட மண்டபம் ஒன்று சட்டமன்ற நிதியிலிருந்து கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கோரிக்கை மனுவை 7-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனிடம் அளித்தனர். இதையடுத்து அவர் உடனே கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி