மது போதையில் பேருந்து நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்

50பார்த்தது
கும்பகோணத்தில் மது போதையில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்ட தனியார் பேருந்தில் மது போதையில் ஏறிய மூன்று பேர், பெண்கள் அருகில் அமர்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களை நடத்துனர் விகாஸ் (23) வேறு இருக்கையில் அமருமாறு தெரிவித்துள்ளார். அப்போது இடத்தை மாற்றி அமர முடியாது என நடத்துனரிடம் மது போதையில் இருந்த வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த நடத்துனரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் நடத்துனர் விகாஸ் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்துனரை தாக்கிய போதை வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி