கும்பகோணத்தில் மூப்பனார் நினைவு தின விழா

50பார்த்தது
கும்பகோணத்தில்G. K. மூப்பனார் அவர்களின் 23வது நினைவு நாளை முன்னிட்டு நேற்று(ஆக.30) குடந்தை உச்சி பிள்ளையார் கோவில் எதிர்புறம் உள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாநில அரசியல் ஆலோசனை உயர்மட்ட குழு உறுப்பினர். M. ராஜாங்கம்கிழக்கு மாவட்ட தலைவர். P. S. சங்கர் ஆகியோர் முன்னிலையில், தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் G. சந்திரசேகர மூப்பனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
.
அதனைத் தொடர்ந்து குடந்தை பெசன்ட் ரோடு மூப்பனார் பங்களாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, த. மா. கா மாநில செயற்குழு உறுப்பினர் G. சந்திரசேகர மூப்பனார் தலைமையேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குடந்தை மாநகர தலைவர் NP. அருண்குமார் வரவேற்புரையாற்றினார். மாநில அரசியல் உயர் மட்ட ஆலோசனை குழு உறுப்பினர். M. ராஜாங்கம் , கிழக்கு மாவட்ட தலைவர் P. S. சங்கர், தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர். N. K. சேகர், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர். துரை. ஜெயபால், மாநில செயலாளர் MKR. அசோக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர். MRSR. சிவா, மாநகரத் துணை தலைவர். N. R. ஸ்ரீராம் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர். L. R. செல்வம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி