சுவாமிமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது

65பார்த்தது
சுவாமிமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது



சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார். திருச்சி சௌடாம்பிகா பள்ளி குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டார். இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ராமமூர்த்தி குடும்பத்தினர் அமுது வழங்கினர்.

தொடர்புடைய செய்தி