போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி: இஸ்லாமியர்கள் பங்கேற்பு

79பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சார்பாக போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கும்பகோணத்தில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றதுஇந்த பேரணியில் ஆயிரகணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்,

இந்த பேரணியில் மாவட்ட தலைவர் ஜாஃபர் அலி தலமையில் நடைப்பெற்றது. மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், போதை பழக்கத்தால் இளைஞர்கள் அடையும் பாதிப்பு, பூரண மது ஒழிப்பின் அவசியம் குறித்துபேசினார். மேலும் போதை பொருட்கள் அதிகம் நடமாடும் தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது, இப்பொறுப்பை உணர்ந்து தமிழக அரசு போதை பொருள் ஒழிப்பில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி