போக்குவரத்து துறை ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம்

81பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் நலமீட்பு சங்கம் சார்பில், போக்குவரத்து கழகம் தலைமை அலுவலக வாயில் முன்பு அகவிலைப்படியை நீதிமன்ற உத்தரவின் படி உயர்த்தி வழங்கக் கோரி பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 2022 முதல் இன்றுவரை அரசு வழங்கப்படும் வருமான வைப்புநிதி மற்றும் பணிக்கொடை சலுகையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வூதியர்கள் நல மீட்பு சங்க மாநிலத் தலைவர் தஞ்சை ராஜா தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் வேதை சுப்பையன், நாகை மனோகரன், மயிலாடுதுறை அமுதன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி