காலையிலேயே நிரம்பி வழிந்த மாநாட்டு திடல்

80பார்த்தது
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று (அக்.27) நடைபெறுகிறது. பல்வேறு இடையூறுகளை தாண்டி இந்த மாநாடு தற்போது நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்துள்ளனர். காலையிலேயே மாநாட்டு திடலில் தொண்டர்கள் நிரம்பி வழிந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பதால் நேற்றிரவே குழந்தைகள், முதியவர்கள் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்த்துச் சென்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி