திருவட்டார் கோவில் கருவறையில் சூரிய ஒளி பாயும் அபூர்வ காட்சி

54பார்த்தது
108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  
      பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலை நேரம் சூரியனின் மயக்கும் பொன்னிற கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளின் உடலில் விழும் வகையில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   
      அதாவது, புரட்டாசி மாதம்  முதல் வாரம் மாலையில் மறையும் சூரிய ஒளி கதிர்கள் கோவில் கருவறை வரை பாய்ந்து செல்லும் அதிசயம் நடைபெறும்.      நேற்று (24-ம் தேதி) மாலை மறைய தொடங்கிய சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து சபா மண்டபம்,   உதயமார்த்தாண்ட மண்டப பகுதியைத் தாண்டி கருவறையில் பள்ளிகொண்ட பெருமாளின் உடலில் விழுந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.    
   இந்த அபூர்வ காட்சியை இன்றும் ( 25-ம் தேதி)  மாலை 6 மணி அளவில் காணலாம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி