மதுரை, கோவையில் மீண்டும் கனமழை.. மக்கள் அவதி

52பார்த்தது
மதுரை, கோவையில் மீண்டும் கனமழை.. மக்கள் அவதி
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சமீப காலமாக மதுரையில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்தது. அந்த வகையில் நேற்றும் மதுரை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரையில் வெள்ளம் வடிவதற்குள் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெயததால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி