நாகர்கோவில்: இமாம் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

73பார்த்தது
தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (செப்.,24) காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள்சேர்ப்பதாக கிடைத்த தகவலின்  அடிப்படையில் இந்த   சோதனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் நாகர்கோவில் இளங்கடை, தெற்கு புதுத்தெரு  பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும்,   முகம்மது அலி, அமீர் அலி (எ) ஆலின்  ஷா (62) என்பவரிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கன்னியாகுமரி பகுதியில் செயல்படும் பள்ளி வாசலில் இமாம் என்று கூறப்படுகிறது.  

ஏற்கனவே காலை முதலே என்.ஐ.ஏ., அதிகாரிகள் இளங்கடை பகுதியில் இவரது வீட்டை தேடி வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பின்பு முகம்மது அமீர்  வசித்து வரும் வாடகை வீட்டை கண்டு பிடித்தனர்.   இச்சம்மவம் நாகர்கோவில் பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி