உலக சுற்றுலா தினம்: குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு

75பார்த்தது
ஆண்டுதோறும் செப்டம்பர் 27 ம் தேதி உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை கௌரவிக்கும் விதமாக சுற்றுலாத்துறை அலுவலர் காமராஜ் தலைமையில் பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் படகு தளத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு சங்கு மற்றும் மாசி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாடு, இந்தியாவின் வெளி மாநிலம் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தது சுற்றுலா பயணிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி