திண்டிவனம் - Tindivanam

வழக்கறிஞர் அலுவலக கண்ணாடி உடைத்து சேதம்: போதை நபர் மீது

வழக்கறிஞர் அலுவலக கண்ணாடி உடைத்து சேதம்: போதை நபர் மீது

திண்டிவனம், கணபதி நகரைச் சேர்ந்தவர் குட்டி என்கிற ராகவன், (36). முன்னாள் பா. ம. க மாவட்ட தொண்டரணி செயலாளர். இவரது மனைவி ரேவதி வழக்கறிஞர். இவர்களது அலுவலகம் அவரப்பாக்கம் கூட்ரோட்டில் துலுக்காணம் தெருவில் உள்ளது. இந்த அலுவலம் மாலை பூட்டியிருந்தது. அப்போது அவரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், (20);என்பவர் போதையில் அங்கு வந்து, அலுவலகத்தின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார். இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து ராகவன் திண்டிவனம் டவுன் போலீசில், விஜய் மீது புகார் கொடுத்தார். இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த விஜய், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய விஜய் கடந்த பிப்ரவரி 13ம் தேதி, திண்டிவனம் ராஜாங்குளம் முருகன் கோவிலில் புகுந்து வேல், பொருட்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இந்த வழக்கில் அவர் உடல் நிலை சரியில்லாததால் கோர்ட் உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமினில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியே வந்துள்ளார். திருட்டு வழக்கில் உடனடியாக ஜாமின் எடுக்காத ஆத்திரத்தில் வழக்கறிஞர் அலுவலகத்தை விஜய் தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக திண்டிவனம் டவுன் போலீசார் விஜய் மீது இன்று(செப்.11) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా