திண்டிவனம் அருகே விவசாயி மாயம் போலீசார் விசாரணை

84பார்த்தது
திண்டிவனம் கே. டி. ஆர். நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம்(வயது 47). விவசாயி, இவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உஷா(42) மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி