திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து ஐந்து வயது சிறுவன் பலி

572பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் மற்றும் சுந்தரி தம்பதியின் மகன் மோத்திஸ் இவர் நொளம்பூர் கிராமத்திற்கு அவரது உறவினில் வீட்டிற்கு அவரது அம்மாவுடன் விசேஷத்திற்கு சென்றிருந்தான் அப்பொழுது அங்கு பாப்கார்ன் போடும் எந்திரத்தில் உள்ள பிளக்கை பிடித்த போது அதிலிருந்து மின்சாரம் மோத்திஸ் மீது பாய்ந்து துடித்துடித்தான்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி அவனை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் கொண்டு செல்லும் வழியிலேயே மோத்திஸ் உயிர் இழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து வயது சிறுவன் தன் தாய் மற்றும் உறவினர்கள் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி