குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்

81பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திண்டிவனம் நகராட்சி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மரக்காணம் ரோடு ஹவுசிங் போர்டு, வாகாப் நகர், மன்னார்குாமி கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையிலும் வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி