மயங்கி விழுந்து இளம்பெண் மரணம்!
திண்டிவனம் வட்டம், விட்லாபுரத்தைச் சோ்ந்தவா் சத்யவாணி. இவரது மகள் அகிலாவுக்கும் (வயது 23), செஞ்சி வட்டம், எடைமலை கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநரான கோ. கோபிக்கும் (வயது 27) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அகிலாவும், அவரது சகோதரியான கெளசல்யாவும் வியாழக்கிழமை தாய் வீட்டுக்கு வந்திருந்தனா். ஏற்கெனவே தைராய்டு பிரச்சனையால் அகிலா அவதியுற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்த போது திடீரென மயங்கி விழுந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.