திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

543பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் திண்டிவனத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தற்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டிவனம், தீவனூர் , சந்தைமேடு , கன்னிகாபுரம், கூட்டேரிப்பட்டு, சாரம், ஒலக்கூர், ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையானது சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கனமழையால் திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் , பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி