பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

83பார்த்தது
பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
திண்டிவனம் வட்டம், கீழ்சேவூா், சிவன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமானுஜம் மகன் சுப்புராயலு (54). இவா், சனிக்கிழமை திண்டிவனம் அடுத்துள்ள நொளம்பூா் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கும், சுப்புராயலு சென்ற பைக்கும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சுப்புராயலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு பைக்கில் வந்த நொளம்பூா் பகுதியைச் சோ்ந்த நீலகண்டன் மகன் பிரபாகரன் (25) காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மற்றொரு விபத்து: சென்னை, மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்(39). இவா், தனது மனைவி அருணா (26), மகன் சுதா்சன் (4) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் அடுத்துள்ள காவேரிபாக்கம் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், மோகன் உள்ளிட்ட மூவரும் காயமடைந்தனா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து, திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி