வால்பாறை - Valparai

கோவை: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கோவை: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கோவை சுந்தராபுரம் காந்தி நகர் 3வது வீதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (53). இவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பிரியா என்பவர் அவரது மனைவி தமனிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர், ஜானகிராமன் வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஜானகிராமன் படுத்த நிலையில் உயிரிழந்து அழுகி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த தமனி இதுகுறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்