கோவை சாய்பாபாகாலனி அழகேசன் சாலையில் உள்ள டி. ஏ. ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெறுகிறது. இப்போட்டியில் ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயம் பள்ளி என 4 அணிகள் பங்கேற்றன.
இந்த போட்டியை ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கிரிக்கெட் போட்டி துவங்கியதும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் போட்டியில் விளையாடும் மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகவும் இனிவரும் நாட்களில் வரவேற்பும் ஆர்வமும் அதிகரிக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.