கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சிறுவாணி சாலையில் நேற்று 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு ஐந்துமுக்கு சாலை வழியாக ரோட்டை கடக்க முயற்சி செய்தது. இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தினர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனர். பொதுமக்கள் பாம்பை கண்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.