கனமழையில் பாறை சரிந்து போக்குவரத்து நிறுத்தம்.
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சற்றுமுன் கன மழை பெய்து வருவதால். வால்பாறை பொள்ளாச்சி செல்லும் 16-வது கொண்டை ஊசி வளைவில் பாறை சரிந்து சாலையில் விழுந்ததால் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை வைத்து பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்பு போக்குவரத்து சீராக இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.