கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவை: முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவை குருடம்பாளையம் அடுத்த போஸ்டல் காலனியை சேர்ந்தவர் லட்சுமி (66). இவர் நேற்று முன்தினம் தொப்பம்பட்டி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பெண்கள் அவரது அருகில் சென்று ஒரு முகவரியை கூறி வழி கேட்டனர். அதற்கு லட்சுமி தனக்கு அந்த முகவரி தெரியாது என்றார்.  அந்த சமயத்தில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை பார்த்த அந்த பெண்கள், லட்சுமி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து லட்சுமி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా