மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியத் தொகை ரூ.2,118 கோடியை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது என திஷா குழு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், 2023-24ம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களை விட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியுள்ளோம். நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் ஒன்றிய அரசால் ஊதியம் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.