
திருவள்ளூர்: மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.15 லட்சம்
தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சம் 20 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். வட்டி ஆண்டுக்கு 6 சதவீதமாக இருக்கும். பிசி, எம்பிசி, சீர்மரபினரே இந்த கடனைப் பெற முடியும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கடனை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள், www.tabcedco.tn.gov.in என்ற இணையதளம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.