திருவள்ளூர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆடிட்டர் தற்கொலை

59பார்த்தது
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் ஆடிட்டரான ஏ. குமரகுரு வசித்து வருகின்றனர்,
இவர் காக்களூரில் தனியார் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளை செலுத்தி கொடுக்கும் தொழில் செய்து வரும் நிலையில் ஜிஎஸ்டி கணக்கு சம்மந்தமாக கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஆடிட்டர் ஏ. குமரகுரு தன்னுடன் சேர்த்து 430 பேரிடம் ரூ. 100 கோடி GST மோசடி செய்ததாக புகார் கொடுத்துள்ளார்,
இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து 23/10/2024 புதன்கிழமை அன்று ஆடிட்டர் குமரகுரு திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வழக்கறிஞர்களுடன் வந்துள்ளனர்,
அப்போது அங்கு வந்த பிரேம்குமார் என் மீதே புகார் கொடுக்க வந்திருக்கிறாயா உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விட்டதாக ஆடிட்டர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்,
மேலும் 10 லட்சம் கேட்டு பிரேம்குமார் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது, இந்நிலையில் இன்று அதிகாலை குமரகுரு வீட்டில் உள்ள மின்விசிறியில்
தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டார்,
காவல்துறையினர்
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து அவரது தாயார் புகைப்படம் அருகில் ஆடிட்டர் குமரகுரு உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you