திருவள்ளூர்: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை

58பார்த்தது
திருவள்ளூர் அரசு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேத விற்பனரை கொண்டு நடைபெற்ற ஆயுத பூஜை விழா


திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் அரசு வாகனங்களுக்கு எலுமிச்சை பழம் தேங்காய் பூசணிக்காய் சுற்றி உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் திமுக ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் ஆயுத பூஜை விழாவில் பங்கேற்றனர் இதில் வேத விற்பனர் மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜையும் நடைபெற்றது பின்னர் வீடியோ அலுவலகத்தில் உள்ள வாகனங்களுக்கும் குறிப்பாக ஒன்றிய குழு தலைவர் ஜெய சீலி ஜெயபாலன் அவர்களுக்கு அரசு வழங்கிய வாகனம் அதேபோன்று ஒன்றிய ஆணையர்களின் இரண்டு வாகனங்களுக்கும் சேர்த்து பூசணிக்காய் சுற்றி உடைத்து சிறப்பு பூஜை செய்தனர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்திற்கும் எலுமிச்சை பழம் தேங்காய் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது பின்னர் அதனை மரபு படி அதன் ஓட்டுனர் திருவள்ளூர் ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையர் குணசேகரனை அமர வைத்து வலம் வந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி