திருவள்ளூர்: கோவிலில் சிறுமியிடம் கைவரிசை சிசிடிவி காட்சி!

76பார்த்தது
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்த நிலையில் கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு பெண் ஒருவர் தனது சிறு குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்துள்ளார் குழந்தை அங்கும் இங்குமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தையின் தாய் மற்றொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை அங்கிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது இதை அடுத்து அக்குழந்தையை கையில் பிளாஸ்டிக் பை வைத்துக் கொண்டு வந்த மர்ம பெண் ஒருவர் அக்குழந்தையை தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே நுழைவாயிலில் இறக்கிவிட்டு குழந்தை கையில் அணிந்திருந்த மோதிரம் பிரேஸ்லெட் ஆகியவற்றை கழற்றிக்கொண்டு குழந்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார் மேலும் இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் துறையில் புகார் அளிக்க பெண்ணிடம் கூறிய நிலையில் தனது கணவருக்கு தெரிந்தால் தன்னிடம் சண்டை போடுவார் என தெரிவித்து விட்டு அழுது கொண்டே குழந்தையை தூக்கிச் சென்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று குழந்தை கையில் இருந்த மோதிரம் பிரேஸ்லெட் ஆகியவை திருடிச்சென்று குழந்தையை விட்டு விட்டுச் சென்ற சம்பவம் கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி