திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

திருவள்ளூர்: அயர்ன் பாக்ஸில் ஷாக் அடித்து மாணவன் பலி

திருவள்ளூர்: அயர்ன் பாக்ஸில் ஷாக் அடித்து மாணவன் பலி

திருவள்ளூர் அடுத்த விடையூர் நெமிலி அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (47). கூலித் தொழிலாளியான இவருக்கு மித்ரா (16) என்ற ஒரு மகளும், தீபக்குமார் (14) என்ற ஒரு மகனும் இருந்தனர். மித்ரா விடையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார், தீபக்குமார் 9- ம் வகுப்பும் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று(அக்.12) வீட்டில் இருந்த தீபக் குமார் தன் துணிமணிகளை அயர்ன் பாக்ஸ் மூலம் அயர்ன் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அயர்ன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து தீபக் குமார் அலறி துடித்தபடி கீழே விழுந்தார். இதைக்கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள விடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தீபக்குமார் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து ஹரிபாபு திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துணிகளை அயர்ன் செய்தபோது அயர்ன் பாக்ஸ் மூலம் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் விடையூர் நெமிலி அகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా