சிவகாசி - Sivakasi

சிவகாசி: இமானுவேல்சேகரின் பிறந்த நாள் விழா

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ரயில்வேகேட் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் சமூக நீதிப்போராளி தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் 100வது பிறந்த தின விழாவில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைசச்ருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மேடையில் பூக்களால் அலங்கரிக்கப்ட்ட தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளான சேலைகள், அன்னதானம், வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அதிமுக கட்சியை சேர்ந்த பல அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்
விருதுநகர்: கைபேசி செயலி மூலம் வானிலை முன்னெச்சரிக்கை அறியலாம்
Oct 10, 2024, 10:10 IST/விருதுநகர்
விருதுநகர்

விருதுநகர்: கைபேசி செயலி மூலம் வானிலை முன்னெச்சரிக்கை அறியலாம்

Oct 10, 2024, 10:10 IST
வடகிழக்கு பருவமழை - 2024 வானிலை முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் ‘TN Alert” என்ற கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இச்செயலியின் மூலம் பொதுமக்கள் அனைவரும் வெப்பநிலை, மழை போன்ற வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் தங்கள் புகார்களை இச்செயலியில் பதிவு செய்து உரிய தீர்வு காணவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் மேற்காணும்கைபேசி செயலி மூலம் வானிலை முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம் செயலினை Google Play Store- லிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், கேட்டுக்கொண்டுள்ளார்.